Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் கால்நடைகள் உள்ள போதும் பயிர்ச்செய்கை காலங்களில் மேய்ச்சல் தரவை இல்லாமையால் பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கரைச்சி, கண்டாவளை, பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் தற்போது 37 ஆயிரத்து 667 மாடுகளும் 805 எருமை மாடுகளும் 7 ஆயிரத்து 562 ஆடுகளும் உள்ளன.
மேய்ச்சல் தரவைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவைகள் அத்துமீறிய பயிர் செய்கை நிலங்களாகவும் குடியிருப்பு நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளமையால் மேய்ச்சல் தரவைகள் இல்லாது போய்விட்டன.
இந்நிலையில் பயிர்ச் செய்கை காலங்களில் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்;களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதுடன் கால்நடை வளர்ப்பைக் கைவிடும் நிலையும் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago