2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

குழை வெட்டச் சென்றப் பெண் சடலமாக மீட்பு

Gavitha   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஆட்டுக்கு குழை வெட்டிய பெண், உயிரிழந்த சம்பவம், ஏழாலை பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. நகுலேந்திரராஜா நேசமலர் (வயது 49) என்ற பெண்ணே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பெண், குழை வெட்டச் சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் தேடியபோது வீட்டு வளவில் இருந்த பாழடைந்த கிணற்றில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சடலம் மீட்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X