2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத கொல்களம் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சங்கானை பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களமொன்றை நடத்திவந்த 7 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி திங்கட்கிழமை (12) உத்தரவிட்டார்.

சங்கானைப் பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களமொன்றை ஞாயிற்றுக்கிழமை (11) காலை பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முற்றுகையிட்டு, 7 சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

இறைச்சியை இடமாற்றுவதற்காக சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம், பொதுச் சுகாதார பரிசோதரின் உறுதிப்படுத்தல் இறப்பர் முத்திரை என்பவற்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றினர்.

அத்துடன், 400 கிலோகிராம் மாட்டிறைச்சியையும் இரண்டு பசு மாடுகளை உயிருடனும் பொலிஸார் மீட்டனர்.

சந்தேகநபர்கள் ஏழாலை, சுன்னாகம், மாசியப்பிட்டி மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

கைது செய்யப்பட்;ட சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்தினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X