2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம்’

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன்
“இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தது போன்று, சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம்” என, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச மன்னிப்புச் சபையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த யொலன்டா ஃபொஸ்டர், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 258ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, நேற்று  (04) சந்தித்தார். இதன்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“எங்களுடைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இதுவரை இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர். பல நோய்களுக்கு உள்ளாக்கியிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களின் உறவினர்களின் மீள் வருகைக்காகவே காத்திருக்கின்றனர்.

எங்களைப் பொறுத்தவரை, நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டின் மூலமோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் மூலமோ, எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை. இவை அனைத்தும், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே மேற்கொள்கிறது” எனத் தெரிவித்தனர்.

உள்ளூர் அரசியல்வாதிகளின் செயற்பாடு எவ்வாறு உள்ளது என யொலன்டா ஃபொஸ்டர் கேள்வியெழுப்பிய போது,

“உள்ளூர் அரசியல் தரப்புகள், அவ்வவ்போது நாடாளுமன்றத்திலும், வெளியிலும் குரல் கொடுகின்றார்கள் அவ்வளவுதான். எங்களுக்கு எந்தவிதமான முடிவும் இல்லை. மேலும், நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்த பின்னர் சர்வதேசத்தைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் வந்து சந்தித்து கலந்துரையாடிச் சென்றுள்ளனர். அவர்களாலும் எதுவும் நடைபெறவில்லை” எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .