Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
சர்வதேச சிறுவர் தினம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. சர்வதேச சிறுவர் தின வைபவத்தை யாழ்;ப்பாணத்தில் இம்முறை கொண்டாடுவதற்கு சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு முடிவெடுத்துள்ளது என யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.
'இந்நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் 3 நாட்கள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 1ஆம் திகதி காலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறும்.
தொடர்ந்து அன்று மாலை மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் சார்ந்த வீடியோ காட்சிகள் காண்பிக்கப்படும்.
மறுநாள் 2ஆம் திகதி சிறுவர் பூங்காவில், சிறுவர்களுக்கான கலை நிகழ்வுகளும் சிறுகளுக்கான போட்டி நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இறுதிநாளான 3ஆம் திகதி, மல்லாகம் மகா வித்தியாலயத்தில் சிறுவர்களுக்கான மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக சிறுவர் தெரிவுசெய்யப்பட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள்.
இந்நிகழ்வுகளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொள்வதாகவிருந்தனர் எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் அவ்விருவரும் சமுகமளிக்க முடியாமல் போய்விட்டதால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களைச் சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் முக்கியஸ்தர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
22 minute ago
29 minute ago