Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 13 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
மானிப்பாய் - உரும்பிராய் வீதியில், கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் வல்வெட்டித்துறை - வேம்படியைச் சேர்ந்த மோகனதாஸ் பிறேமாவதி (வயது-68) என்ற தாயாரும் அவரது மகனான மோகனதாஸ் திலீபன் (வயது-32) என்பவருமே உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபட காரில் பயணித்த போதுஇ மானிப்பாய் - உரும்பிராய் வீதியில் கார் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது.
அதில் காரை ஓட்டிச்சென்ற மகனும் அவரது அவரது தாயாரும் படுகாயமடைந்தனர். காரில் பயணித்த மேலும் ஐவர் காயமடைந்தpருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago