2025 மே 05, திங்கட்கிழமை

சிகிச்சை பலனின்றி தாயும் மகனும் பலி

Niroshini   / 2021 மே 13 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மானிப்பாய் - உரும்பிராய் வீதியில், கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் வல்வெட்டித்துறை - வேம்படியைச் சேர்ந்த மோகனதாஸ் பிறேமாவதி (வயது-68) என்ற தாயாரும் அவரது மகனான மோகனதாஸ் திலீபன் (வயது-32) என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபட காரில் பயணித்த போதுஇ மானிப்பாய் - உரும்பிராய் வீதியில் கார் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது.

அதில் காரை ஓட்டிச்சென்ற மகனும் அவரது அவரது தாயாரும் படுகாயமடைந்தனர். காரில் பயணித்த மேலும் ஐவர் காயமடைந்தpருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X