2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுவரொட்டி ஒட்டிய இருவருக்கு, 100 ரூபாய் அபராதம்

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

கோப்பாய் பகுதியில், கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட இருவரையும் கடந்த 21ஆம் திகதி பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று நீதவான் வழக்கு விசாரணையை இன்று (01) வரை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில், அவர்கள் இருவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம்; விதித்து நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .