Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இளஞ்சைப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைகள், ஒக்டோபர் 30, 31ஆம் திகதிகளிலும் நவம்பர் 1ஆம் திகதியிலும் நடைபெறவுள்ளன.
இதற்கமைய, ஒக்டோபர் 30ஆம் திகதி பிற்பகல் 1 - 4 மணி வரை சாத்திரமும், 31ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இலக்கியமும் அன்றைய தினம் பிற்பகல் 1 – 4 மணி வரை வரலாறும் நடைபெறும்.
மறுநாள் 1ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை, இலக்கணமும், அன்றைய தினம் பிற்பகல் 1 - 4 வரை உரைநடையும் நடைபெறவுள்ளன.
மேலும் பரீட்சைகள் யாவும் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்திலும் மட்டக்களப்பு ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லுரியிலும் நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
41 minute ago