2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சீர்திருத்தப்பணிகளில் 54 பேர் ஈடுபட்டுள்ளனர்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை பெண்கள் மூவர் உட்பட 54 பேர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சமுதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நீதிமன்ற சமுதாயம் சார் சீர் திருத்த அதிகாரி சிவஞானம் இதயதீபன் தெரிவித்தார்.

திருட்டு, கசிப்பு உற்பத்தி, சட்டவிரோதமாக காட்டு மரங்களை  வெட்டுதல், பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தல், குடும்பத்தகராறு மற்றும் போதைக்கு அடிமையாகுதல் ஆகிய குற்றச்செயல்களுக்கு  பொலிஸாரால் கைது செய்யப்படுவோருக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதிக்கின்றது.

குறித்த தண்டப்பணத்தை செலுத்த முடியாதவர்களை சமுதாய சீர் திருத்த திணைக்களம் பொறுப்பேற்று, சிறைச்சாலை செல்வதைத் தடுக்கின்றது.

இதற்கமைய பொறுப்பேற்றுக்கொண்ட தண்டனையாளர்கள் மீதான வழக்கை நீதவான் மீண்டும் பரிசீலித்து தண்டப்பணம் செலுத்த முடியாதவர்களுக்கு பொருத்தமான கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.

இவர்களுக்கு ஆன்மிக வழிகாட்டல், உளவளதுணை ஆலோசனை, ஆளுமை விருத்தி, உபதேசம் மற்றும் மதுவெறுப்பு சிகிச்சை போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X