2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிரேஸ்ட பிரஜைகளின் நவன்களை பேணும் அமைப்பு அங்குரார்ப்பணம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.கிளையின் ஏற்பாட்டில் சிரேஸ்ட பிரஜைகளின் நலன்களை பேணும் அமைப்பின் அங்குரார்ப்பணமும் முதியோர் தின நிகழ்வும் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் யாழ்.தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (14) இடம்பெற்றது.

முதியோர்களின் நலன்களை பேணி பாதுகாக்கும் அமைப்பின் மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்க வேண்டும் என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சிரேஸ்ட பிரஜைகளின் நலன்களைப் பேணும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

'மகிழ்ச்சியான வயோதிப காலத்தை அடைதல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதியவர்கள் தற்போது எதிர்கொள்ளும் உரிமை சார்ந்த பிரச்சினைகள், அவர்கள் முகங்கொடுக்கும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தின் இணைப்பாளர் தி.கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X