2025 மே 02, வெள்ளிக்கிழமை

தண்ட பணத்தில் 10 வீதத்தை வழங்க தீர்மானம்

Niroshini   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

-எம்.றொசாந்த்

நீதிமன்றத்தால் அறவிடப்படும் அபராத தொகையில் 10 சதவீதத்தை  நீதி அமைச்சுக்கு வழங்குவதென்று, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

நீதிமன்றங்களில் குற்றவாளிகளிடம் இருந்து அறவிடப்படும்  அபராதம், நீதி அமைச்சால் அந்தப் பகுதி பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும். அதன் மூலம், பிரதேச சபைகளுக்கு பெருமளவான வருமானங்கள் கிடைக்கப்பெற்று வந்தன.

இந்நிலையில், நீதிமன்றங்களின் அபிவிருத்திக்காக நீதிமன்றங்களால் விதிக்கப்படும் அபராதத் தொகைளை  வழங்குமாறு, நீதி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்தே, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, அபராதத் தொகை ஊடாக கிடைக்கும் வருமானத்தில், 10 சதவீதத்தை, நீதி அமைச்சுக்கு வழங்குவதெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X