2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு  வருகை தந்த இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலய அறங்காவலர் குழுவின் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழுவின் செயலாளர் சிவாகுணசேகரன் ஆகியோர் வரவேற்றனர் .

வழிபாட்டை தொடர்ந்து, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சீதை அம்மன் ஆலய வரலாறு,தொன்மைதொடர்பிலும் கேட்டறிந்தார்.

அத்தோடு ஆலயத்திற்கு வருகை தரும்இராஜதந்திரிகளின் குறிப்பேட்டில் உயர்ஸ்தானிகர் ஒரு சிறப்பு குறிப்பை எழுதினார்.  உயர்ஸ்தானிகருக்கு  நினைவுப் பரிசு ஆலய அறங்காவலர் குழுவின் நினைவுப்பரிசு ஒன்றினையும் வழங்கி கௌரவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .