Editorial / 2020 மார்ச் 31 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், மார்ச் 16ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதிவரையான 3 வாரங்களில் தவணையிடப்பட்ட வழக்குகள் இடம்பெறும் மறு தவணைகள் நீதிமன்றப் பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல் வழக்குகள் தவிர்த்த ஏனைய வழக்குகளின் மறு தவணை விவரங்களே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், மார்ச் 16ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 15ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 18ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 17ஆம் திகதி புதன்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 18ஆம் திகதி வியாழக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 23ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 25ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 24ஆம் திகதி புதன்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 26ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 25ஆம் திகதி வியாழக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 29ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள், ஜூன் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் திகதி புதன்கிழமை தவணையிடப்பட்ட வழக்குகள், ஜூலை 1ஆம் திகதி புதன்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2ஆம் திகதி வியாழக்கிழமை தவணையிடப்பட்ட வழக்குகள், ஜூலை 2ஆம் திகதி வியாழக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவணையிடப்பட்ட வழக்குகள், ஜூலை 3ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.
எனவே, சந்தேக நபர்கள், வழக்காளிகள், சாட்சிகள், சட்டத்தரணிகள் இந்த ஒழுங்கில் வழக்குகள் மறுதவணையிடப்பட்டுள்ளமையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026