Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வுக்காக அனுமதி கடிதங்களைப் பெற்றுக்கொள்பவர்கள் அக்கடிதங்களை பிழையான வழியில் பயன்படுத்தி மணல் அகழ்வினை மேற்கொள்வதாக கிளிநொச்சி மாவட்டச் செயலரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற விவசாயக் குழுக்கூட்டத்தில் இம்முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மணல் அகழ்வுக்காக கடிதங்களை வழங்குகின்றபோது அதிகாரிகளினால் குறிப்பிடப்படும் இடத்தில் மணல் அகழ்வினை மேற்கொள்ளாது வேறு இடங்களில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக சில கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாவட்டச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இவ்வாறான தவறுகள் நடைபெறாத வண்ணம் பிரதேச செயலர்கள் கண்காணித்துக் கொள்ளவேண்டுமெனவும் மணல் அகழ்வு பிழையான வழியில் நடைபெற்றால் மாவட்டச் செயலகத்துக்கு அறிவிக்கும்படியும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் இதன்போது அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago