Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 ஜூலை 06 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கோரும் பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபை அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில், இன்று (06) இடம்பெற்றது.
இந்நிலையில், இன்றைய அமர்வில் மாகாண சபை உறுப்பினர் ஆ.பரஞ்சோதியால் கொண்டுவரப்படவிருந்த பிரேரணையே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண விவசாயம், கல்வி அமைச்சுகள் மீதான விசாரணை நிறைவுற்ற பின்னர், மீன்பிடி, சுகாதார அமைச்சுகள் மீதான விசாரணைகள் இடம்பெறும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிலையில், விசாரணைக் குழு வேண்டாம், தெரிவுக்குழுவே அமைக்கப்பட வேண்டும் என ஆ.பரஞ்சோதி பிரேரணை சமர்ப்பிக்க இருந்தார்.
எனவே, “குறித்த பிரேரணையில், திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளதால், இந்தப் பிரேரணை இன்று (06) சபையில் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அடுத்த அமர்வில் எடுக்கப்படும்” என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
8 minute ago
55 minute ago
9 hours ago
27 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
55 minute ago
9 hours ago
27 Sep 2025