2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தாலிக்கொடி அபகரிப்பு

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர், பிரான்பற்று நிக்காமம் விக்னேஸ்வரா பகுதியில் பெண்ணொருவரை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 11 பவுண் தாலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுடன் சேர்த்து சிறிய கடை ஒன்றினை குறித்த பெண் நடத்தி வருகின்றார். இக்கடைக்கு வெள்ளிக்கிழமை (16) மதியம் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளனர்.

வீதியில் சன நடமாட்டம் குறைந்த நேரத்தினை அவதானித்த அவர்கள் குளிர்பான போத்தலை திரும்ப கொடுப்பது போல் பாசங்கு செய்து, அவர் அணிந்திருந்த தாலி கொடியை பறிக்கமுற்பட்டுள்ளனர்.

உடனே சுதாகரித்து கொண்ட மேற்படி பெண் அவர்களை பிடிக்கவே, அப் பெண்னை மடக்கி பிடித்த இருவரும் சுவரில் பெண்ணின் தலையை மோதி தாலி கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் குறித்த பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளவாலை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X