2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நடமாடும் சாரய வியாபாரி கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் முனிஸ்வரன் வீதிப்பகுதியில், சைக்கிளில் மதுபான போத்தல்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்த நபரை, வியாழக்கிழமை (03) அதிகாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதானவர் அல்லைப்பிட்டி பகுதியினை சேர்ந்த 61 வயதுடைய நபர் என பொலிஸார் மேலும் கூறினர்.

சிவில் உடையில் சென்ற பொலிஸார், தாமும் சாரயம் வாங்குவது போல் பாவனை செய்து சந்தேகநபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 05 மதுபான போத்தல்களை பறிமுதல் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .