2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் சூடு: சடலம் கையளிக்கப்பட்டது

Editorial   / 2017 ஜூலை 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.நிதர்ஷன்

நல்லூர் பகுதியில், நேற்று (22) மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் ஹேமசந்திரவின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக 15 ஆண்டுகள் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஹேமசந்திர (வயது 58) சிலாபத்தை சேர்ந்தவர்.

நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இரவு 12.10 மணியளவில் உயிரிழந்தார்.
சிலாபத்திலிருந்து வருகை தந்த உறவினர்களிடம் இன்று (23) சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X