Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் அதிகமாக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட கிளிநொச்சி-முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பிரதேசம் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக இன்று(12) பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முகமாலை பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கையை சர்வதேச கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் இராணுவத்தின் பொறியியல் அணியினால் முன்னெடுக்கப்பட்டது.
நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பளை பிரதேச செயலாளர் பிரமோதயன் ஜெயராணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் செயற்பாடு கடந்த 8 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
46 minute ago
3 hours ago
4 hours ago