Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 30 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
பொதுமக்கள் நோயாளிகளைப் பார்வையிட வருவதை இயன்ற வரை தவிர்த்துக் கொள்ளுமாறு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில், அவர் இன்று (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தற்போதைய பருவமழைக் காலத்தைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக, டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. .
“மிகுந்த நெருக்கடியான இச்சூழ்நிலையிலேயே, வைத்திய சேவையை வழங்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் நோயாளிகளைப் பார்வையிட வருவதை இயன்ற வரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்கு, இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
“மகப்பேற்று விடுதிகளில், அனுமதிக்கப்பட்ட ஒருவருடன் ஒருவர் மாத்திரமே நிற்பதற்கு அனுமதிக்கப்படுவர். குழந்தைகள் பிறக்கின்ற போது வைத்தியசாலைக்கு வருகைதந்து பார்வையிடுவதை இயன்றவரை தவிர்த்து, வீடு சென்ற பின்னர் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
“மேலும், பொதுமக்கள் நோயாளியைப் பார்க்க வரும்போது தாம் கொண்டுவரும் உணவு, உடை முதலான பொருட்களைக் கொடுத்துவிட்டு, விரைவாக விடுதிகளை விட்டு வெளியேறி, வைத்தியசேவையை வழங்க ஒத்துழைக்கவும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 minute ago
17 minute ago
23 minute ago