Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 05 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோத ரோலர் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற தற்காலிக நீதிவானும் சிறுவர் நீதிமன்ற நீதிவானுமாகிய கறுப்பையா ஜீவராணி, ஞாயிற்றுக்கிழமை (05) உத்தரவிட்டதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநிலம் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து ரோலர் படகில் நுழைந்து நெடுந்தீவுக்கு மேற்கே 09 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்தியமீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்திருந்தனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் அனைவரும் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை இந்திய துணைத்தூதரகம் மேற்கொண்டிருந்தது. பின்னர் மீனவர்கள் நால்வரும், ஊர்காவற்துறை நீதிமன்ற தற்காலிக நீதிவானும் சிறுவர் நீதிமன்ற நீதிவானுமாக கறுப்பையா ஜீவராணியின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
15 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
3 hours ago