2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றத் தாக்குதல்: இருவருக்குப் பிணை

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியில் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் மேலும் இருவரை நிபந்தனைப் பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திங்கட்கிழமை (12) அனுமதித்தார்.

தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவ்விருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பிணையாளிகள் யாழ் நீதவான் நீதிமன்ற நீதவனால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். சந்தேகநபர்கள் மறுஅறிவித்தல் வரை வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது ஆகிய நிபந்தனைகளே விதிக்கப்பட்டுள்ளன.

இந்த பிணை நிபந்தனைகள் தொடர்பில் குடியகல்வு, குடிவரவு திணைக்களம் மற்றும் கட்டுநாயக்கா விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அறிவிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டது. சந்தேகநபர்களின் கடவுச்சீட்டுக்களை நீதவான் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்குமாறும் நீதிபதி கூறினார்.

சந்தேகநபர்கள் மாதாந்தோறும் வரும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணிக்கும் 12 மணிக்கும் இடையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

22 வழக்குகள் தொடர்பான சந்தேகநபர்கள் யாழ்.மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்கோரி கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் 5 வழக்குகள் தொடர்பான சந்தேகநபர்கள் ஏற்கெனவே நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதால், அந்த 5 வழக்குகள் தொடர்பான பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

ஏனைய 17 வழக்குகளில் 6 வழக்குகளுடன் தொடர்புபட்ட 2 சந்தேகநபர்களுக்குப் மேல் நீதிமன்றத்தால் நேற்று பிணை வழங்கப்பட்டது. மிகுதி 11 வழக்குகளையும் சேர்ந்த 5 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டபோதும், அவர்கள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் இதன் பகுதி வழக்குகள் காணப்படுவதால் அவர்கள் பிணையில் செல்ல முடியாது தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களின் தடுப்புக்காலம், அவர்களின் சுகாதாரம், மனநிலைமை மற்றும் குடும்ப உறவுகளில் நிலைமை ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து, இரண்டு சந்தேகநபர்களுக்கும் நீதிபதி பிணை வழங்கினார்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதியன்று நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், பகுதியாக பிணை வழங்கப்பட்டு வந்ததுடன், அவ்வாறு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்படாதவர்கள் மேல் நீதிமன்றத்தின் ஊடாக பிணை மனுக்கோரப்பட்டது.

இவர்களுக்கு எதிராக நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, பொலிஸாரை அடித்துக் காயப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனங்களை சேதமாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X