Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப்பொருள் காப்பகத்தினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) உடைத்து, அங்கு சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை திருடிய சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட 7 கிலோகிராம் கஞ்சா பொதி மற்றும் திருட்டுக்காக பயன்படுத்தப்பட்ட கோடரி உள்ளிட்ட பொருட்களை கிளிநொச்சி பொலிஸார், ஊடகங்களுக்கு புதன்கிழமை (23) காண்பித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்திய கிளிநொச்சி பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, அவரை 27ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான், செவ்வாய்க்கிழமை (22) அனுமதி வழங்கினார்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்களை வவுனியாவில வைத்து, வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 minute ago
11 minute ago