2025 ஜூன் 30, திங்கட்கிழமை

படையினரின் வசம் இருந்த ஒரு தொகுதி காணி விடுவிப்பு

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

யாழ்ப்பாண குடாநாட்டில், படையினரின் வசம் இருந்த மேலும் ஒரு தொகுதி பொதுமக்களுக்குச் சொந்தமான காணி, இன்று (30) விடுவிக்கப்பட்டுள்ளது. 

காணி விடுவிப்பின் 16ஆவது கட்டமாக, யாழ்., வலி வடக்கு, வயாவிளான், வடமூலை பகுதியில் இதுவரை காலமும் படையினரின் வசம் இருந்த 29 ஏக்கர் காணியே, இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வசாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வில்,  காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதளை, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X