Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் பண்ணைப் பாலத்தின் பாதை புனரமைப்புப் பணிகள், 2,875.26 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாலப்பாதையில் மீனவப்படகுகள் சென்று வருவதற்கான இரண்டு பாலங்கள் காணப்படுகின்றன. இந்த பாலங்களும் நவீன முறையில் புனரமைக்கப்படுகின்றன.
மழை காலங்களில் பண்ணைப் பாலப் பாதையானது, சேதமடைந்து பயணிக்க முடியாதவாறு காணப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு 21 கிலோமீற்றர் நீளமான இந்தப் பாதையை புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
கடலரிப்புக்களை தடுக்கும் வகையில் இரண்டு பக்கமும் கற்கள் போடப்பட்டு வீதியைப் பாதுகாக்கும் நடவடிக்கையும் இதனுடன் முன்னெடுக்கப்படுகின்றது.
விரைவில் இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர் இதனூடான போக்குவரத்து இலகுபடுத்தப்படும் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நயினாதீவு நாகவிகாரைக்கு செல்லும் அதிகளவான மக்கள் இந்தப் பாதையூடாகவே சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago