Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
ஏழரை மணித்தியாலங்களுக்கு மேல் வேலைசெய்ய முடியாது எனக் கூறி பயணிகளை இடைநடுவில் விட்டு விட்டு, நடத்துனர் தனது வீட்டுக்கு சென்ற சம்பவமொன்று திங்கட்கிழமை (24), மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கோண்டாவில் டிப்போ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
811 இலக்க சங்கானை மிருசுவில் வழித்தடத்தில் ஈடுபடும், கோண்டாவில் சாலைக்கு சொந்தமான இ.போ.ச பஸ்ஸில் கடமையில் ஈடுபட்ட மிருசுவில் அம்மன் கோயில் பகுதியினை சேர்ந்த நடத்துனர், தான் ஏழரை மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்ய முடியாது என கூறி, சாரதியுடன் முரண்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பில் சாரதி, கோண்டாவில் டிப்போவுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, வேறு ஒரு நடத்துனர, மிருசுவில் பகுதிக்கு அனுப்பபட்டே மீண்டும் குறித்த பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
குறைந்தளவு சேவையையே போக்குவரத்து சபை இவ் வீதியூடாக மேற்கொண்டு வரும் நிலையில், மேற்படி பஸ்ஸினை நம்பியே பல பயணிகள் வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நடத்துனர் இவ்வாறு நடந்து கொண்டதால் நீண்ட நேரமாக குறித்த பஸ்ஸூக்காக பயணிகள் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago