2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கிச் சூடு : 5 பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸாரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடித்து, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் வியாழக்கிழமை (09) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் வைத்து, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதால் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து யாழ். பொலிஸார் ஐவர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணையானது வியாழக்கிழமை (09)  யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிவான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X