2025 மே 22, வியாழக்கிழமை

பிராந்திய பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு

Editorial   / 2018 மே 28 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், டி.விஜிதா

யாழில் இருந்து வெளிவரும் பிராந்திய பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான செல்வராசா இராசேந்திரம் (வயது 56) இன்று (28) அதிகாலை இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் கொழும்புத்துறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நான்கு மோட்டார் சைக்கிளில் துணியால் முகத்தை முடிக்கட்டிக் கொண்டு வந்த வாள்வெட்டுக்கும்பல், குறித்த நபர் மீது வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X