2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புலிகளால் புதைக்கப்பட்ட நகைகளை தேடிய ​பொலிஸார்

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளைத் தேடும் நடவடிக்கைளை முல்லைத்தீவு பொலிஸார் இன்று(26) ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு-சுகந்திபுரம், நிரோஸன் விளையாட்டு மைதானத்தின் பல இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேடப் படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினால் இவ்வாறு மைதானத்தின் பல இடங்கள் தோண்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு-நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவுக்கமைய  குறித்த விளையாட்டு மைதானத்தின் பல இடங்கள் தோண்டப்பட்ட போதிலும்,அங்கு எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இறுதி யுத்தக்காலத்தின் போது தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆயுதங்கள் மற்றும் நகைகளை முல்லைத்தீவின் பல இடங்களிலும் புதைத்துச் சென்றுள்ளதாகவும்,இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X