2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பாடசாலை செல்லாத சிறுவன் சான்று பெற்ற பாடசாலையில் சேர்ப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பாடசாலை செல்லாது சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சிறுவனை, நீதிமன்ற உத்தரவுக்கமைய  அச்சுவேலி சான்று பெற்ற பாடசாலையில் புதன்கிழமை (23) அனுமதித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன், பாடசாலை செல்லாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுவது தொடர்பில் நன்னடத்தை உத்தியோகஸ்தர், கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

சிறுவனை மீட்ட பொலிஸார், யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதவான், 14 நாட்கள் சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .