2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலையை மூடியது கடுங்காற்று

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று வீசி வருவதால், தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை (09) காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

கடும் காற்றுக்காரணமாக பாடசாலையின் கூரைகள் தூக்கி எறியப்படும் நிலையில் இருந்தமையால் மாணவர்களால் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவில்லை என்றும் இதனாலேயே பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாடசாலை கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ளமையால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலையை மூடி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு பாடசாலை அதிபருக்கு அறிவுறுத்தியதாக தீவகக் கல்வி வலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .