2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புத்தூர் விபத்தில் ஒருவர் பலி

Menaka Mookandi   / 2016 ஜூன் 28 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான், செல்வநாயகம் கபிலன்

புத்தூர் - மீசாலை வீதியில், இன்று செவ்வாய்க்கிழமை (28) லொறியொன்றில் மோதுண்ட  துவிச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர், உயிரிழந்துள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மட்டுவில் வடக்கைச் சேர்ந்த பேரின்பராஜா சிவரஞ்சன் (வயது 35) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சந்தைக்கு பலாப்பழங்களை ஏற்றிக்கொண்டு துவிச்சக்கரவண்டியில் சென்றவரை, லொறி மோதித்தள்ளியதில், துவிச்சக்கரவண்டியில் சென்றவர் தலை சிதறி பலியானார்.

சடலம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X