2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுடனான கலந்துரையாடல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தால், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் வாழ்வாதார உதவி வழங்குவதற்காக 2ஆம் கட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கலந்துரையாடல்,  எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை 10 மணிக்கு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, வடமாகாண கிராம அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் பயனாளிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலர் நா.பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X