Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேரில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான மீனவர் ஒருவரை, பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (16) விடுதலை செய்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு நாகப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி வீரமணி (வயது 50) என்ற மீனவரே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
24ஆம் திகதி, குறித்த மீனவருக்கு புற்றுநோய் சத்திரசிகிச்சை இடம்பெறவிருந்த நிலையில், இவர் 22ஆம் திகதி காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேற்படி மீனவருக்கு புற்றுநோய் இருப்பது தொடர்பில், யாழ். கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் புற்றுநோய்க்குள்ளான மேற்படி மீனவரை விடுதலை செய்வதற்கான அனுமதியை சட்டமா அதிபர் திணைக்களம், யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை (16) வழங்கியது.
இது தொடர்பில் குறித்த மீனவரை விடுவிக்க யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் பருத்தித்துறை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, மீனவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
குறித்த மீனவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கையை, யாழ். இந்திய துணைத்தூதரகம் மேற்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago