Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.நிதர்ஷன்)
யாழ். மண்டைதீவு பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டது.
மண்டைத்தீவு கடற்பரப்பில் படகில் பயணம் செய்த மாணவர்கள் ஆறுபேர் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்தனர்.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாணவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் ஏதேனும் அருந்தியிருந்தனரா என்பது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மாணவர்களின் உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி: யாழில் ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப் பலி
யாழ். உரும்பிராயைச் சேர்ந்த, யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான, நந்தன் ரஜீவன் (18), சின்னத்தம்பி நாகசுலோஜன் (17) ஜெயசாந்த் தினேஸ் (17) சண்டிலிப்பாயை சேர்ந்த, யாழ்.மத்திய கல்லூரி மாணவன் தனுசன் (18) கொக்குவில் பகுதியைச் சேர்ந்த, கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனான தேவகுமார் தனுரதன் (20), நல்லூரைச் சேர்ந்த, கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனான கோணேஸ்வரன் பிரவீன் (20) ஆகியோரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
19 Jul 2025