Janu / 2024 மார்ச் 14 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது .
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் போக்குவரத்து பேருந்து, வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்ட போது அராலி தெற்கு பக்கத்தில் இருந்து வந்த, வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் பாய்ந்ததுள்ளது .
இதில் முச்சக்கரவண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரியவந்துள்ளது .
இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு. கஜிந்தன்

3 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
05 Nov 2025