2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முன்னாள் ஜனாதிபதியை, ஜனாதிபதியாக்கிய பொதுஜன முன்னணி

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை “ஜனாதிபதி" என்றே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட அக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் விழித்து உரை நிகழ்த்தினர்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (01) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் அமைப்பாளர்; உள்ளிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள், “எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் வென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசி அபிவிருத்திகளை முன்னெடுப்போம்” என உரை நிகழ்த்தினார்கள்.

அதேவேளை மண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதியை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பதாகைகளிலும் "அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ" என்றே எழுதபட்டு இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .