2025 மே 17, சனிக்கிழமை

முன்னைய கூட்டத்தில் பேசப்பட்ட விடயம் முடிவெடுக்கப்பட்டது

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். குடாநாட்டில் உள்ள 3 முக்கிய வீதிகளின் புனரமைப்பு தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பிரதமர் தலைமையிலான அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்ட அதே விடயம் ,ஒருவிதமான மாற்றமும் இல்லாமல் நேற்றய தினம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலும் பேசி முடிக்கப்பட்டிருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில், வழுக்கையாறு- புங்குடுதீவு- குறிகட்டுவான் வரையான 26.5 கிலோ மீற்றர் நீளமான வீதி சுமார் 12000 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.

அதேபோல் யாழ்ப்பணம்- மானிப்பாய்- காரைநகர் வரையான 27.21 கிலோ மீற்றர் நீளமான வீதி 3500 மில்லியல் ரூபாய் செலவில் புனர மைக்கப்படும்,. மூன்றாவதாக யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்துறை வரையான 55.38 கிலோமீற்றர் நீளமான வீதி 4,000 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என கூறப்பட்டதுடன், இதற்கான கேள்வி கோரல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதே வீதிகள் தொடர்பாக நேற்றய தினம், யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரதமர் தலமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பேசப்பட்டதுடன், 6 மாதங்களுக்கு முன்னர் திரையிட்டு காண்பிக்கப்பட்ட அதே செயற்றிட்ட வரைபுகள் காண்பிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரி எழுந்து நின்று குறித்த வீதிகளின் புனரமைப்புக்கள கேள்விகள் கோரப்பட்டுள்ளது என கூறினார். மேற்படி வீதிகளின் புனரமைப்பு எப்போது தொடங்கும் என கடந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேட்டதுபோல், 6 மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .