2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் சாலை பொது முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். இணைப்பதிகாரி ரி.கனகராஜ் தெரிவித்தார்.

3 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த முறைப்பாட்டினை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொது முகாமையாருக்கு எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டும் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிமை, ஊழியர்கள் செய்யும் சிறு தவறுகளைக் கூட பெரிதாக எடுத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது, சம்பள நிலுவைகள் ஒழுங்கான முறையில் வழங்கப்படாமை போன்ற குற்றச்சாட்டுகளை சங்க ஊழியர்கள் சாலை முகாமையாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் எழுத்து மூலம் வழங்கியுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விளக்கமளிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலையிடம் கோரியுள்ளதாக இணைப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X