2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளிகளுக்கு தளபாடங்கள், உபகரணங்கள் வழங்கல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள பாலைப்பாணி, மூன்று முறிப்பு ஆகிய முன்பள்ளிகளுக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலரின் ஏற்பாட்டில் பிரித்தானிய புனர்வாழ்வும் புதுவாழ்வும் நிறுவனத்தினால் தளபாடங்களும் கற்றல் உபகரணங்களும் திங்கட்கிழமை (12) வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் பின் தங்கிய பகுதியாக காணப்படும் மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்காக மாந்தை கிழக்கு பிரதேச செயலரினால் பல்;வேறு வேலைத்திட்;டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாலைப்பாணி கிராமத்தில் இயங்கிவரும் காசி முன்பள்ளிக்கும்  மூன்றுமுறிப்பு கிராமத்தில் இயங்கி வரும் அலைமகள் கிராமத்துக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X