2025 ஜூலை 23, புதன்கிழமை

மூன்று வர்த்தகர்களுக்கு அபராதம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 3 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (14) தீர்ப்பளித்தார்.

அதிகார சபை அதிகாரிகள் கடந்த வாரம், காரைநகர் வலந்தலை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில், விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 வர்த்தகர்கள் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். காலாவதியான பிஸ்கட் விற்பனை செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபாயும், காலாவதியான பேஸ்வோஸை (கயஉந றயளா) விற்பனை செய்த வர்த்தகருக்கு 5 ஆயிரம் ரூபாயும், விலைப்பட்டியல் காட்சிப்படுத்ததாக வர்த்தகருக்கு 1000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .