2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை மரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த, தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இன்று (08) காலை உயிரிழந்துள்ளார்.

வீரபுத்திரன் மணி என்ற 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இணுவில் பகுதியில் தங்கியிருந்துள்ள குறித்த நபர், தனக்குத் தலையில் கட்டி உள்ளது என்று கூறி, யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில், கடந்த 7 நாள்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, தற்போது இவர் உயிரிழந்துள்ளார் என்றும் இவரது இறப்பு தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .