Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 மே 07 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
அம்மன் கோவில் வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் குடும்பத் தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, கடந்த 24ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று சுகவீனம் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago