2025 ஜூலை 16, புதன்கிழமை

யானைக்குட்டி மதவடியில் விபத்து: இருவர் படுகாயம்

Gavitha   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

தெல்லிப்பளை யானைக்குட்டி, மதவடி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் மேற்கு, கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த சிவலிங்கம் சிவமதுசன் (வயது 19) மற்றும் குணசேகரம் விதுசன் (வயது 19) ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதிக வேகம் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X