2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்தில் 44 ஆயிரம் வீடுகள் தேவை

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் 44 ஆயிரத்து 471 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாகவிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் 1 இலட்சத்து 89 ஆயிரத்து 699 குடும்பங்கள் வசித்து வருவதுடன், அவர்களில் 1 இலட்சத்து 45 ஆயிரத்து 228 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் உள்ளன.

19 ஆயிரத்து 451 குடும்பங்கள் தற்காலிக கொட்டகைகளிலும் மிகுதி 25 ஆயிரத்து 20 பேர் வீடுகள் இல்லாமலும் உள்ளனர். இந்த இரண்டு தரப்பினருக்கும் வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 6,300 வீடுகள் அமைப்பதற்கான அனுமதி கிடைத்து. அவற்றில் 4,562 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 1,738 வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைவிட இந்த உதவியில் பகுதி சேதமடைந்த 224 வீடுகள் புனரமைக்கப்பட்டும் உள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X