2025 மே 23, வெள்ளிக்கிழமை

ரயிலில் தகாத முறையில் நடந்த ஊழியர் தொடர்பில் விசாரணை

எம். றொசாந்த்   / 2018 மே 08 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் - கொழும்பு ரயிலில் பயணித்த பிரித்தானிய பெண் ஒருவருடன் தகாத முறையில் நடக்க முற்பட்டு, இனத்துவேச வார்த்தைகளால் பேசிய ரயில் ஊழியர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (07) கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த ரயிலில்,  வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார்.

இதன்போது குறித்த ரயிலில், பயணிகள் குறைவாக இருந்தமையை பயன்படுத்திக் கொண்ட சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த பயணிகள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்துள்ளார்.

மேலும், நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் அனைவரையும் மிரட்டியுள்ளார்.

ரயில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அந்த சம்பவம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்ததுடன், சம்பவம் தொடர்பான காணொளியையும் வழங்கியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X