2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வடக்கு கடற்பரப்பில் கடந்த வருடம் 136 இந்திய மீனவர்கள் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 01 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கடந்த வருடம் 2016ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் 136 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டிசெம்பர் மாதம் வரையான 12 மாதங்களில் நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இவர்கள், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவற்றில் 97 மீனவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதியில் டிசம்பர் 22ஆம் திகதி வரை 7 படகுடன் வௌ;வேறு தினங்களில் கைதான 39 மீனவர்கள் தொடர்ந்தும் நீதிமன்ற உத்தரவுக்கு அமையத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

28 விசைப்படகுகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் படகுகளுடன் 16 மீனவர்களும், மார்ச் மாதம் 5 படகுடன் 20 மீனவர்களுமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் 2 படகுடன் நெடுந்தீவில் கடலில் 13 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட அதேவேளை மே மாதம் எந்தவொரு மீனவர்களும் கைதுசெய்யப்படவில்லை. அதேபோல் ஜீன் மாதம் 4 விசைப்படகுடன் பருத்தித்துறை, நெடுந்தீவு கடலில் 16 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

ஜீலை மாதம் 2 படகுடன் 17 மீனவர்கள் பருத்தித்துறை கடலிலும், 2 படகுடன் 10 பேர் நெடுந்தீவு கடலிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் மாதம் 1 படகுடன் 4 மீனவர்களும், ஒக்டோபர் மாதம் 1 விசைப்படகுடன் 5 மீனவர்களும், நவம்பர் மாதம் 2 விசைப்படகுடன் 11 மீனவர்களும், வருடத்தின் இறுதி மாதமான டிசெம்பர் 5 படகுடன் 24 மீனவர்களுமாக மொதம் 136 மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக, உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இவ் கைது கடந்த 2015ஆம் ஆண்டினை விட 49 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். கடந்த 2016ஆம் ஆண்டு, நெடுந்தீவுக் கடலிலே அதிகளவான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவற்றில் கடந்த மார்ச் மாதம் 2 படகுகளுடன் மாதகல் கடலில் கடலில் கைதான மீனவர்கள் 8 பேருக்கு வழக்கு தாக்கல் செய்திருந்தாகவும், 23 வழக்குகள் ஊர்காவற்துறை நீதிமன்றிலும், 3 வழக்குகள் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் தொடரடப்பட்டிருந்ததாக  தெரிவித்தார். இவற்றில் ஜீலை மாதம் அதிகளவான மீனவர்களாக 27 பேர் கைதுசெய்யப்பட்;டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு 43 வழக்குகளுடன் தொடர்புபட்ட 273 மீனவர்கள் 43 படகுகளுடன் கைதுசெய்யப்பட்டிருந்த அதேவேளை இவ் வருடம் 28 வழக்குகளுடன் தொடர்புபட்டிருந்த 136 மீனவர்கள் 28 விசைப்படகுடன் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் எண்ணிக்கை சரிக்கு அரைவாசி குறைவடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X