Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
வடபகுதி கடலில் இந்திய டோலர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கண்டித்து, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம், யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்திய, அறவழிப் போராட்டம் புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
'அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வடபகுதி கடலை விற்காதீர்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் நடைபெற்றது.
பண்ணையில் அமைந்துள்ள யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திலிருந்து ஆரம்பமான இந்தப் போராட்;டம், காங்கேசன்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதி வழியாக கண்டி வீதிக்குச் சென்று, யாழ்.மாவட்டச் செயலகத்தில் முன்பாக, போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றது.
இதன்போது, மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனைச் சந்தித்து கலந்துரையாடிய போராட்டக்காரர்கள், மகஜரொன்றையும் கையளித்தனர்.
அதன் பின்னர், மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்துக்குச் சென்ற போராட்டக்காரர்கள், தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜனுக்கும் மகஜரொன்றை கையளித்தனர்.
இந்தப் போராட்டத்தில், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
14 minute ago
21 minute ago