2025 ஜூன் 25, புதன்கிழமை

வடமாகாணத்தில் 2 வன்முறைச்சம்பவங்கள் பதிவு

Editorial   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“உள்ளுராட்சி தேர்தல் நிறைவடைந்த பின், வடமாகாணத்தில் இதுவரை 2 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக” தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதுக்கான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதுக்கான நிலையம், தேர்தல் கால வன்முறை தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில், 10ஆம் திகதி மாலை 4 மணியலிருந்து இதுவரை 40 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றுள் அதிகமானவை சட்டவிரோதமான முறையில் கூட்டங்களை வீதிகளில் திரட்டுதல் தொடர்பில் பதிவாகியுள்ளன. அதில் 13 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி, இரவு இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ஆதரவாளர்களின் சட்டவிரோத ஒன்று கூடல் மற்றும் கட்சி வேட்பாளரை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடு தொடர்பிலான முறைப்பாட்டு சம்பவம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அதே போன்று கடந்த 11ஆம் திகதி, கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் சுயேட்சை குழு ஆதரவாளர்களுக்கும்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பினருக்கும் இடையில் தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் இதுவரை சுதந்திரமான சுமூகமான தேர்தல் சூழலைப் பெற்றிருக்கின்றோம் என்பதை தெரிவிப்பதுடன் அனைத்து தரப்பினரையும் எந்த விதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்துவதோடு தேர்தல் வெற்றிகளை கொண்டாடுவதாயின் வீதிகளில் கூடாமல் வீட்டில்  அமைதியான முறையில் மகிழ்ச்சியினை பரிமாறிக் கொள்ளல் சிறந்தது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .