Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
கொடிகாமம் மந்துவில் பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை விடுதலை செய்வதாக, சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீ நிதி நந்தசேகரன் புதன்கிழமை (14) தீர்ப்பளித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 30,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறு பணித்ததுடன், அவருக்கு கடுமையாக எச்சரிக்கையும் விடுத்தார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி விடுமுறையில் வந்திருந்த ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர், மந்துவில் பகுதியில் உள்ள கடைக்கு சென்று பெற்றோல் தருமாறு கேட்டுள்ளார். இதன்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளார்.
'பெற்றோல் இல்லை' என்று கடை உரிமையாளர் கூறியதையடுத்து, அவரை குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Jun 2025
29 Jun 2025